search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லிக்குப்பம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேர் கைது
    X

    நெல்லிக்குப்பம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேர் கைது

    நெல்லிக்குப்பம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் கடைவீதி பகுதியில் 3 பேர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பி.என். பாளையத்தை சேர்ந்த அன்பு (வயது 32), தினேஷ் (வயது 26), சத்தியராஜ் (வயது 22) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×