search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திதாக கட்டப்பட்ட நியாயவிலை கட்டிடங்கள் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்
    X

    திதாக கட்டப்பட்ட நியாயவிலை கட்டிடங்கள் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டிடங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கோடிவிநாயகநல்லூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம், திருவிடைமருதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்காடி புதிய கட்டிடம், துளசாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் கோபால் எம்.பி. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிதலைவர்கள் அவை.பாலசுப்பி்ரமணியன் (தலைஞாயிறு), கிரிதரன் (தேத்தாக்குடி), மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×