என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: பெண் பலி
Byமாலை மலர்16 July 2018 6:01 PM GMT (Updated: 16 July 2018 6:01 PM GMT)
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுரண்டை:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி சமுத்திரம் (வயது 57). இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது மகன் ராஜ்குமார் (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஒப்பனையாள்புரத்தில் இருந்து சாம்பவர் வடகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சுரண்டை அருகே உள்ள குலையநேரியை கடந்து இரட்டைகுளம் விலக்கில் சென்ற போது ராஜ்குமார் மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.
இதனால் சமுத்திரம் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் ராஜ்குமாரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரட்டைகுளம் மேல தெருவை சேர்ந்த அய்யாச்சாமி மகன் மாடசாமி (32) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சமுத்திரத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி சமுத்திரம் (வயது 57). இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது மகன் ராஜ்குமார் (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஒப்பனையாள்புரத்தில் இருந்து சாம்பவர் வடகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சுரண்டை அருகே உள்ள குலையநேரியை கடந்து இரட்டைகுளம் விலக்கில் சென்ற போது ராஜ்குமார் மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.
இதனால் சமுத்திரம் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் ராஜ்குமாரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரட்டைகுளம் மேல தெருவை சேர்ந்த அய்யாச்சாமி மகன் மாடசாமி (32) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சமுத்திரத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X