search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு
    X

    நெல்லை- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

    நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தினமும் பலத்த மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறையில் (பிடிஓ) 12 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 11 செ.மீ., பெரியாறில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை,  நீலகிரி மாவட்டம் ஜிபசார் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RainInTamilNadu #SouthwestMonsoon
    Next Story
    ×