search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி சாலை திட்டத்தை கைவிடக்கோரி பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்
    X

    8 வழி சாலை திட்டத்தை கைவிடக்கோரி பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது தலைமை வகித்தார். 

    தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில நிர்வாகி காமராசு, வழக்கறிஞர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன், மின்வாரிய (சிஐடியூ) வட்ட தலைவர் அகஸ்டின், இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் ஈஸ்வரன், சுற்றுச்சூழல் சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
    Next Story
    ×