search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூங்கில்துறைபட்டு அருகே ஆட்டோ மரத்தில் மோதியதில் வாலிபர் பலி
    X

    மூங்கில்துறைபட்டு அருகே ஆட்டோ மரத்தில் மோதியதில் வாலிபர் பலி

    மூங்கில்துறைபட்டு அருகே ஆட்டோ மரத்தில் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரிஷிவந்தியம்:

    மூங்கில்துறைபட்டு அருகே உள்ள மைக்கேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் லியோபிரதாப் (வயது 17). ஆட்டோ டிரைவர்.

    இவர் மைக்கேல் புரத்தில் இருந்து மேல் சிறுவளுர்கூட்டு ரோட்டுக்கு தனது ஆட்டோவை ஓட்டி சென்றார். மும்முனை சந்திப்பில் சென்றபோது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் லியோபிரதாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×