search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது
    X

    மதுரையில் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது

    மதுரையில் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரையை அடுத்த மேலூர் தனியாமங்கலம் சூர்யா காலனியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது38). இவர் நேற்று மாலை ஜெய்ஹிந்துபுரம் 2-வது மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருநதார்.

    அப்போது மேல அனுப்பானடியைச் சேர்ந்த ஜெயபாலன் (22), பழைய குயவர்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் காந்தி (28) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் சசிகுமாரை கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டினர்.

    இதுகுறித்து ஜெய்ஹிந்து புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலஅனுப்பானடி வீட்டு வசதி வரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் நேற்று மாலை பழைய குயவர்பாளையம் ரோடு சிந்தாமணி சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காமராஜர் புரத்தைச் சேர்ந்த அஜித் குமார் (19), தினேஷ் (18) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் குருசாமியை வழி மறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

    இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மதுரை கீரைத்துறை பசும் பொன்நகரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (38). இவர் ராணி பொன்னம்மாள் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காமராஜர் புரம் வசந்தம் (21), குயவர்பாளையம் நவீன் (20), அலங்காநல்லூர் இளவரசன் (20) ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர்.

    அவர்கள் ராமலிங்கத்தை கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டினர். இது குறித்து கீரைத்துறை போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×