search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்அப்பில் பரவிய செக்ஸ் லீலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை சீருடையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு
    X

    வாட்ஸ்அப்பில் பரவிய செக்ஸ் லீலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை சீருடையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு

    சீருடையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஆபாச செய்கை அடங்கிய வீடியோ வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது.

    வேலியே பயிரை மேய்ந்தது போல் குற்றச் செயல்களை ஒடுக்க வேண்டிய ஒரு போலீஸ் அதிகாரியே கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ள செயல் பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது.

    அந்த இன்ஸ்பெக்டரின் லீலைகள் 2 வீடியோக்களாக வெளியாகி உள்ளது. முதல் வீடியோவில் அவர் தனி அறையில் போலீஸ் சீருடையில் நிற்கிறார். அங்கு நின்றவாறே வாட்ஸ்-அப் வீடியோவில் ஒரு பெண்ணை அழைக்கிறார். அந்த பெண்ணுடன் அவர் கிளுகிளுப்பாக பேசுவது போல் அவரது முக பாவனைகள் உள்ளன. இறுதியில் ஆபாச செய்கைகளை அந்த பெண்ணின் முன்பு அரங்கேற்றுகிறார்.

    மற்றொரு வீடியோவில் படுக்கையில் சாதாரண உடையில் படுத்திருந்தபடி வாட்ஸ்-அப் வீடியோவில் அந்த பெண்ணுடன் இன்ஸ்பெக்டர் பேசுகிறார். அப்போது அவரின் ஆபாச செய்கைகள் அத்துமீறுகின்றன. இந்த 2 வீடியோக்களிலுமே ஆடியோ வெளியே கேட்காதபடி முடக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்ஸ்பெக்டரும், அந்த பெண்ணும் என்ன பேசுகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த வீடியோக்களில் இன்ஸ்பெக்டரின் உருவம் தெரிகிறது. ஆனால் அந்த பெண்ணின் உருவம் மட்டும் மறைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பெண் ஆடை அணிந்துள்ளாரா? அல்லது இன்ஸ்பெக்டரை போல் அரைகுறை ஆடையில் இருந்தாரா? என்பது தெரியவில்லை.

    இன்ஸ்பெக்டரின் இந்த செக்ஸ் லீலைகள் மாவட்டம் முழுவதும் பரவி உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது. அவர்கள் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் தொடர்பு கொண்டு பேசும் அந்த பெண் யார்? என்பதை அவரது செல்போன் மூலம் கண்டுபிடித்தனர். அப்போது அந்த பெண் நாகர்கோவிலில் வசிப்பது தெரியவந்துள்ளது.

    அந்த பெண்ணுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் நீண்ட நாட்களாகவே பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணுடன் இப்படி பேசி உள்ளார். அப்படியிருக்கையில் எப்படி இந்த வீடியோக்கள் வெளியே கசிந்தன என்பது மர்மமாக உள்ளது. இன்ஸ்பெக்டரே அத்துமீறி பேசுவதால் இந்த வீடியோக்களை அவர் பதிவு செய்ய வாய்ப்பில்லை. அதனால் இன்ஸ்பெக்டருடன் பழக்கம் வைத்திருந்த பெண் தான் அதனை பதிவு செய்து பரப்பி இருக்க வேண்டும் என தெரியவந்துள்ளது. சுமூகமாக சென்ற அவர்களது உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு இன்ஸ்பெக்டரை பழிவாங்கும் நோக்கத்தில் அந்த பெண் இப்படி செய்து இருக்கலாம் என தெரிகிறது. அல்லது அந்த பெண்ணுக்கு தெரியாமல் யாராவது செல்போனில் இருந்த காட்சிகளை டவுன்லோடு செய்து பரப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே இன்ஸ்பெக்டரால், அந்த பெண் பாதிக்கப்பட்டதாகவும், இன்ஸ்பெக்டர் மீது அவர் போலீஸ் சூப்பிரண்டு, டி.ஜி.பி. மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஆபாச சி.டி.க்களை இணைத்து புகாராக கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மடக்கி அந்த இன்ஸ்பெக்டர் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டாரா? அல்லது எப்படி அந்த பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே செக்ஸ் வீடியோக்கள் பரவியதால் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் திடீரென விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இருந்தாலும் அவர் மீதான விசாரணை தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன்ஸ்பெக்டர் மீதான முதற்கட்ட விசாரணை அறிக்கை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் போலீஸ் சீருடையில் இன்ஸ்பெக்டர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள இன்ஸ்பெக்டர் குமரி மாவட்டத்திலேயே சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி உள்ளார். மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்பட பல்வேறு புகார்களும் அவர் மீது உள்ளன. இதற்காக ஒருமுறை சஸ்பெண்டும் செய்யப்பட்டிருக்கிறார். இப்போது செக்ஸ் விவகாரத்தில் சிக்கி தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார். #tamilnews
    Next Story
    ×