search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்
    X

    சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்

    சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சுவிதா சிறப்பு ரெயில் குறித்த விவரங்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை எழும்பூர்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82601) ஆகஸ்டு 10-ந்தேதி மற்றும் செப்டம்பர் 28-ந்தேதி இரவு 9.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (82602) ஆகஸ்டு 5, 12, 19 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரெயில் (82633) ஆகஸ்டு 10, 24 மற்றும் செப்டம்பர் 28-ந்தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (82632) ஆகஸ்டு 5-ந்தேதி காலை 7 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சுவிதா சிறப்பு ரெயில்(82607) ஆகஸ்டு 21-ந்தேதி இரவு 8 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் (82608) ஆகஸ்டு 15-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    தெற்கு ரெயில்வே இதனை அறிவித்துள்ளது. 
    Next Story
    ×