search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் பா.ஜ.க. கொடி கம்பம் வெட்டி சாய்ப்பு
    X

    கரூரில் பா.ஜ.க. கொடி கம்பம் வெட்டி சாய்ப்பு

    கரூரில் பா.ஜ.க. கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#BJP
    கரூர்:

    கரூர் நகராட்சி 19-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது.

    இரும்பால் ஆன இந்த கம்பம் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் அந்த பகுதியில் நிறுவப்பட்டது.

    இதன் அருகிலேயே பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த கொடி கம்பத்தை பெயர்த்து எடுத்து தேசப்படுத்தி உள்ளனர்.மேலும் கொடியை அப்புறப்படுத்தியதோடு, கயிறையும் அறுத்துள்ளனர். இது குறித்து பா.ஜ.க. நகர தலைவர் செல்வம், வார்டு தலைவர் தங்கவேல் ஆகியோர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் கொடி கம்பத்தை வெட்டி சாய்த்த மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். #BJP
    Next Story
    ×