என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
Byமாலை மலர்12 July 2018 9:40 AM GMT (Updated: 12 July 2018 9:40 AM GMT)
காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சீபுரம்:
சென்னையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
எழும்பூர், அயனாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி வரை சாரல் மழையாக நீடித்தது.
இதேபோல காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், மணலி புதுநகர், தச்சூர், பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, காட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த காற்றினால் தடப்பெரும்பாக்கம், வேன் பாக்கம், வஞ்சிவாக்கம், கோளூர், அண்ணாமலைச் சேரி, திருப்பாலைவனம் ஆவூர் காஞ்சி வாயல் ஆகிய பகுதிகளில் இரவு மின்சாரம் தடைபட்டது. பொது மக்கள் அவதிப்பட்டனர். ஒருசில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை நீடித்தது. மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
காஞ்சீபுரம் - 25.30
செங்கல்பட்டு - 5.50
மதுராந்தகம் - 3.00
ஸ்ரீபெரும்புதூர் - 9.50
தாம்பரம் - 7.00
திருக்கழுக்குன்றம் - 11.00
மாமல்லபுரம் - 5.20
உத்திரமேரூர் - 8.00
திருப்போரூர் - 8.80
வாலாஜாபாத் - 7.40
சோழிங்கநல்லூர் - 11.50
ஆலந்தூர் - 33.00
கேளம்பாக்கம் - 12.40
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
செம்பரம்பாக்கம்- 30
பொன்னேரி-23
ஊத்துக்கோட்டை-17
திருத்தணி-15
பூந்தமல்லி-15
அம்பத்தூர்-15
ஆர்.கே.பேட்டை - 15
சோழவரம்-14
திருவாலங்காடு-14
தாமரைப்பாக்கம்-13
திருவள்ளூர்-12
பூண்டி - 9.6
புழல் - 8.4
சென்னையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
எழும்பூர், அயனாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி வரை சாரல் மழையாக நீடித்தது.
இதேபோல காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், மணலி புதுநகர், தச்சூர், பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, காட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த காற்றினால் தடப்பெரும்பாக்கம், வேன் பாக்கம், வஞ்சிவாக்கம், கோளூர், அண்ணாமலைச் சேரி, திருப்பாலைவனம் ஆவூர் காஞ்சி வாயல் ஆகிய பகுதிகளில் இரவு மின்சாரம் தடைபட்டது. பொது மக்கள் அவதிப்பட்டனர். ஒருசில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை நீடித்தது. மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
காஞ்சீபுரம் - 25.30
செங்கல்பட்டு - 5.50
மதுராந்தகம் - 3.00
ஸ்ரீபெரும்புதூர் - 9.50
தாம்பரம் - 7.00
திருக்கழுக்குன்றம் - 11.00
மாமல்லபுரம் - 5.20
உத்திரமேரூர் - 8.00
திருப்போரூர் - 8.80
வாலாஜாபாத் - 7.40
சோழிங்கநல்லூர் - 11.50
ஆலந்தூர் - 33.00
கேளம்பாக்கம் - 12.40
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
செம்பரம்பாக்கம்- 30
பொன்னேரி-23
ஊத்துக்கோட்டை-17
திருத்தணி-15
பூந்தமல்லி-15
அம்பத்தூர்-15
ஆர்.கே.பேட்டை - 15
சோழவரம்-14
திருவாலங்காடு-14
தாமரைப்பாக்கம்-13
திருவள்ளூர்-12
பூண்டி - 9.6
புழல் - 8.4
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X