என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே கோவில் கதவை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு
Byமாலை மலர்11 July 2018 12:12 PM GMT (Updated: 11 July 2018 12:12 PM GMT)
கோவை அருகே கோவில் கதவை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி பிரிவில் பயனியர் நகர் உள்ளது. இங்கு வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றார். அதன் பின்னர் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த நடராஜர், சிவகாமி அம்மையார், விநாயகர் ஆகிய ஐம்பொன் சிலைகளை திருடி சென்று விட்டனர். திருட்டு போன சிலைகளின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவிலில் திருட்டு போன சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X