search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாடானையில் வீட்டிற்குள் புகுந்து நகை-பணம் கொள்ளை
    X

    திருவாடானையில் வீட்டிற்குள் புகுந்து நகை-பணம் கொள்ளை

    திருவாடானையில் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள சிங்கவள்ளிபுரத்தை சேர்ந்தவர் அல்லிராணி (வயது 45). இவரது கணவர் இறந்துவிட்டதால் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அல்லி ராணியின் தாயார் இறந்து விட்டார். இதையடுத்து அவர் வீட்டை பூட்டி விட்டு துக்க வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய அல்லி ராணி கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீராஜ்தீன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×