என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டையில் உடல் நலமில்லாத தாயை பார்க்க வந்த மகன் பலி - அதிர்ச்சியில் தாயும் இறந்தார்
Byமாலை மலர்9 July 2018 2:24 PM GMT (Updated: 9 July 2018 2:24 PM GMT)
தேவகோட்டையில் உடல் நலமில்லாத தாயை பார்க்க வந்த மகன் பரிதாபமாக இறந்தார். அதனைக் கேட்ட அதிர்ச்சியில் தாயும் இறந்தார்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள பனிப்புலான் வயலைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 55). இவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தாய் சிகப்பி (76).
கடந்த சில நாட்களாக சிகப்பி உடல் நலமின்றி இருந்தார். அவரை பார்ப்பதற்காக மெய்யப்பன் சொந்த ஊர் வந்தார். தேவகோட்டை பஸ் நிலையம் இறங்கிய அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட அங்குள்ள சிமெண்ட் இருக்கையில் படுத்தார்.
நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது மெய்யப்பன் இறந்துவிட்டது தெரியவந்தது.
அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர். தனது ஒரே மகன் இறந்த செய்தியை கேட்டதும், உடல் நலமில்லாமல் இருந்த சிகப்பியும் அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார்.
தாயும், மகனும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை அருகே உள்ள பனிப்புலான் வயலைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 55). இவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தாய் சிகப்பி (76).
கடந்த சில நாட்களாக சிகப்பி உடல் நலமின்றி இருந்தார். அவரை பார்ப்பதற்காக மெய்யப்பன் சொந்த ஊர் வந்தார். தேவகோட்டை பஸ் நிலையம் இறங்கிய அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட அங்குள்ள சிமெண்ட் இருக்கையில் படுத்தார்.
நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது மெய்யப்பன் இறந்துவிட்டது தெரியவந்தது.
அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர். தனது ஒரே மகன் இறந்த செய்தியை கேட்டதும், உடல் நலமில்லாமல் இருந்த சிகப்பியும் அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார்.
தாயும், மகனும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X