search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டையில் உடல் நலமில்லாத தாயை பார்க்க வந்த மகன் பலி - அதிர்ச்சியில் தாயும் இறந்தார்
    X

    தேவகோட்டையில் உடல் நலமில்லாத தாயை பார்க்க வந்த மகன் பலி - அதிர்ச்சியில் தாயும் இறந்தார்

    தேவகோட்டையில் உடல் நலமில்லாத தாயை பார்க்க வந்த மகன் பரிதாபமாக இறந்தார். அதனைக் கேட்ட அதிர்ச்சியில் தாயும் இறந்தார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள பனிப்புலான் வயலைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 55). இவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தாய் சிகப்பி (76).

    கடந்த சில நாட்களாக சிகப்பி உடல் நலமின்றி இருந்தார். அவரை பார்ப்பதற்காக மெய்யப்பன் சொந்த ஊர் வந்தார். தேவகோட்டை பஸ் நிலையம் இறங்கிய அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட அங்குள்ள சிமெண்ட் இருக்கையில் படுத்தார்.

    நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது மெய்யப்பன் இறந்துவிட்டது தெரியவந்தது.

    அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர். தனது ஒரே மகன் இறந்த செய்தியை கேட்டதும், உடல் நலமில்லாமல் இருந்த சிகப்பியும் அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார்.

    தாயும், மகனும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×