search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை
    X

    கொடைக்கானல் அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை

    கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடந்தது.
    பெருமாள்மலை:

    கொடைக்கானல் அருகே புலியூர் ஒத்தமரசெட் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, கால்நடை டாக்டர் ஹக்கீம் மற்றும் வனத்துறையினர் அந்த யானையை மீட்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் இறந்தது பெண் குட்டி யானை. 2 வயதுடைய இந்த யானை இறந்து சுமார் 10 நாட்கள் இருக்கும்.

    இந்த யானை உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது மர்மமான முறையில் இறந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த குட்டி பெண் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், கொடைக்கானல், புலியூர், பேத்துப்பாறை, அஞ்சுவீடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் புலியூர் அகண்ட பள்ளம் பகுதியில் பெண் காட்டு யானை இறந்துள்ளது.

    எனவே யானைகள் விவசாய நிலங்கள் புகாமல் இருக்க வனத்துறையினர் நிரந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×