என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானல் அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை
Byமாலை மலர்9 July 2018 11:30 AM GMT (Updated: 9 July 2018 1:01 PM GMT)
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடந்தது.
பெருமாள்மலை:
கொடைக்கானல் அருகே புலியூர் ஒத்தமரசெட் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, கால்நடை டாக்டர் ஹக்கீம் மற்றும் வனத்துறையினர் அந்த யானையை மீட்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் இறந்தது பெண் குட்டி யானை. 2 வயதுடைய இந்த யானை இறந்து சுமார் 10 நாட்கள் இருக்கும்.
இந்த யானை உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது மர்மமான முறையில் இறந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த குட்டி பெண் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், கொடைக்கானல், புலியூர், பேத்துப்பாறை, அஞ்சுவீடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் புலியூர் அகண்ட பள்ளம் பகுதியில் பெண் காட்டு யானை இறந்துள்ளது.
எனவே யானைகள் விவசாய நிலங்கள் புகாமல் இருக்க வனத்துறையினர் நிரந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X