search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலை உடைத்து 3 பேரை குத்திய கும்பல்
    X

    ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலை உடைத்து 3 பேரை குத்திய கும்பல்

    ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலை உடைத்து 3 பேரை குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை ஆர்.எப். ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 28). இவர், நேற்று மாலை பைக்கில் சென்ற போது ஒரு டீக்கடை முன்பு உட்கார்ந்து இருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் மீது மோதி விட்டார்.

    இதனால் இருத்தரப்பினர் பயங்கரமாக மோதி கொண்டனர். கண்ணன் தரப்பினர் பீர் பாட்டிலை உடைத்து பைக்கை மோதிய சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பிரதாப், கலைவாணனை சரமாரியாக குத்தினர். இதில் 3 பேருக்கும் மார்பு, முதுகில் குத்துப்பட்டு ரத்தம் பீறிட்டு கொட்டியது.

    படுகாயமடைந்த அவர்களை, பொதுமக்கள் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து பீர் பாட்டிலால் தாக்கிய கண்ணன் மற்றும் அவரது மைத்துனர் விஜய் (20), நண்பர் வீரமணி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×