என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம் டாக்டர்கள் முதலில் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் - வெங்கையா நாயுடு
Byமாலை மலர்8 July 2018 12:02 PM GMT (Updated: 8 July 2018 12:02 PM GMT)
மருத்துவ படிப்பை முடித்த இளம் டாக்டர்கள் முதலில் கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை :
சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 30-வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் உரையாற்றிய வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளதாவது, ’மருத்துவ கல்லூரிகளின் கல்வி தரத்தை பொருத்து தான் வருங்கால ஆரோக்கியமான இந்தியா அமையும். மேலும், டாகடர்களின் தரத்தை பொருத்தே மருத்துவமனைகளின் தரமும் அமையும்.
மேலும், முதல் பதவி உயர்வு கிடைக்கும் வரை மருத்துவ படிப்பை முடித்த இளம் டாக்டர்கள் முதலில் கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும். நாடுமுழுதும் 479 மருத்துவ கல்லூரிகள் உள்ளன அவற்றில் 227 அரசும் 252-யை தனியாரும் நிர்வகித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை உயர்த்த அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவிலேயே சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 30-வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் உரையாற்றிய வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளதாவது, ’மருத்துவ கல்லூரிகளின் கல்வி தரத்தை பொருத்து தான் வருங்கால ஆரோக்கியமான இந்தியா அமையும். மேலும், டாகடர்களின் தரத்தை பொருத்தே மருத்துவமனைகளின் தரமும் அமையும்.
மேலும், முதல் பதவி உயர்வு கிடைக்கும் வரை மருத்துவ படிப்பை முடித்த இளம் டாக்டர்கள் முதலில் கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும். நாடுமுழுதும் 479 மருத்துவ கல்லூரிகள் உள்ளன அவற்றில் 227 அரசும் 252-யை தனியாரும் நிர்வகித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை உயர்த்த அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவிலேயே சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X