என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Byமாலை மலர்7 July 2018 9:15 PM GMT (Updated: 7 July 2018 9:15 PM GMT)
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சென்னை:
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
ஆந்திரா முதல் தமிழகம் வரையிலான கடலோர பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருந்தாலும், இதனால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்காது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஜி.பஜார் மற்றும் தேவாலாவில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 2 செ.மீ., உதகமண்டலத்தில் 1 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
ஆந்திரா முதல் தமிழகம் வரையிலான கடலோர பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருந்தாலும், இதனால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்காது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஜி.பஜார் மற்றும் தேவாலாவில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 2 செ.மீ., உதகமண்டலத்தில் 1 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X