search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி மக்கள் மன்றத்தில் குமரி காங்கிரஸ் பொதுச்செயலாளர் இணைந்தார்
    X

    ரஜினி மக்கள் மன்றத்தில் குமரி காங்கிரஸ் பொதுச்செயலாளர் இணைந்தார்

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிவபன்னீர் செல்வன் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிவபன்னீர் செல்வன், மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பி.ஆல்வினுக்கு பொன்னாடை போர்த்தி மன்றத்தில் இணைந்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முன்னிலை வகித்தார். ரஜினி நற்பணி மன்றத்தின் முன்னாள் இளைஞரணி தலைவர் கலுங்கடி சதீஷ்பாபு, சிவபன்னீர் செல்வனுக்கு சால்வை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் மன்ற ஆலோசகர் கனகசபாபதி, நகர செயலாளர் செல்வன், தோவாளை ஒன்றிய செயலாளர் பழனி, மேல்புறம் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், குழித்துறை நகர செயலாளர் சந்தோஷ்குமார், தயாபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘மாற்று கட்சியை சேர்ந்த பலர் ரஜினி மன்றத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மாற்றத்தை விரும்பி அவர்கள் விரைவில் இணைவார்கள் என்றும்‘ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் தெரிவித்தார். 
    Next Story
    ×