search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலமாத்தூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    மேலமாத்தூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

    குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. #ADMK
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமை வகித்தார். வேப்பூர் ஒன்றிய செயலாளர் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், சிதம்பரம் எம்.பி.,சந்திரகாசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், தலைமை கழக பேச்சாளர்கள் முருகேசன், சாமிநாதன், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், ராணி, ராகேஸ்வரி, ஆலத்தூர் ஒன்றிய துணை செயலாளர் திரிசங்கு, வக்கீல் பிரிவு ராமசாமி, குன்னம் பால் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன் உள்பட ஆலத்தூர், வேப்பூர், செந்துறை ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர் கலந்து கொண்டனர். முடிவில் செந்துறை ஒன்றிய செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். #ADMK
    Next Story
    ×