என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருமாம்பாக்கம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்6 July 2018 12:17 PM GMT (Updated: 6 July 2018 12:17 PM GMT)
கிருமாம்பாக்கம் அருகே தனியார் கல்லூரி முன்பு நின்று குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடை- பரிக்கல்பட்டு செல்லும் சாலையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. நேற்று மாலை இந்த கல்லூரி முன்பு 3 வாலிபர்கள் குடிபோதையில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் பில்லாளி தொட்டி கிராமம் வன்னியர் தெருவை சேர்ந்த சரவணன் (30), உண்ணாமலை செட்டிசாவடி கிராமத்தை சேர்ந்த சிவகுரு (31) மற்றும் வரக்கால்பட்டு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த வைத்தியநாதன் (30) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X