search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம்-தா.பழூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    ஜெயங்கொண்டம்-தா.பழூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் விநியோகம் இருக்காது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

    எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, இரும்புலிக்குறிச்சி, தா.பழூர், சிலால், வான திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைகுடம், சோழ மாதேவி, தென்கச்சி பெருமாள்நத்தம், நாயகனைப் பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக் குறிச்சி, காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×