search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டையில் குடோனில் பதுக்கிய 5 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் - வியாபாரி கைது
    X

    அருப்புக்கோட்டையில் குடோனில் பதுக்கிய 5 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் - வியாபாரி கைது

    குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 மூடை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.
    அருப்புக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் பண்டல், பண்டல்கலாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவீரன் தலைமையில் போலீசார் அருப்புக்கோட்டையில் முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மேலரத வீதியில் வியாபாரி மணி முத்துகுமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அங்கு 5 மூடை புகையிலை பொருட்கள் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மணிமுத்து குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×