search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைத்தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேர் கைது
    X

    எல்லைத்தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

    கச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். #TamilNadufishermen
    ராமேஷ்வரம்:

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது. 4 படகுகளில் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராமேஷ்வரம் மீனவர்களையும் இலங்கை கடற்படை விரட்டியடித்தது.

    இலங்கை கடற்படை விரட்டியதால், மீன் பிடிக்க முடியாமல் ராமேஷ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    நடுக்கடலில் மேலும் 2 படகுகளுடன் 8 மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TamilNadufishermen
    Next Story
    ×