search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு
    X

    செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

    குளித்தலை பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    குளித்தலை:

    குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள பழையகோர்ட்டு தெரு, செக்கடி புதுத்தெரு, மரக்கடை ஸ்டோர் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேற்று வந்தனர்.

    இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் செல்போன் கோபுரங்கள் அமைக்கக்கூடாதென உச்ச நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டத்திற்கும், நீதிமன்ற தீர்ப்பிற்கு புறம்பாகவும் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பழைய கோர்ட்டு தெரு, செக்கடி புதுத்தெரு, மரக்கடை ஸ்டோர் பகுதி குடியிருப்புகள், பள்ளி, கோவில்கள் போன்றவை சுற்றியுள்ள பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையான நோய்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். நிலத்தடிநீர் குறையும் என்பது போன்ற பலவகையில் எங்கள் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே பொதுமக்கள் உயிர் பாதுகாப்பிற்காகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க இங்கு செல்போன் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்று மனு அளிக்கவந்ததாக தெரிவித்தனர். பின்னர் தங்கள் மனுவை கோட்டாட்சியர் லியாகத்திடம் அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அவர்கள் நகராட்சி பொறியாளர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×