search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலினைவிட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம்- மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    ஸ்டாலினைவிட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம்- மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

    மு.க.ஸ்டாலினை விட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #ponradhakrishnan #mkstalin
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சுமார் 1,500 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதில் பிரதமரின் அலுவலகம் முழுமையாக கவனம் செலுத்திவருகிறது. எந்தவித பிரச்சினையுமின்றி அவர்களை மீட்டு வரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ் உணர்வைவிட பிரதமர் மோடிக்கு நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதை தி.மு.க. செயல் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அரசில் இருந்த தி.மு.க. ஒருமுறையாவது தமிழுக்காக பேசியதுண்டா? தி.மு.க.வை சார்ந்து இருந்த எந்த பிரதமராவது, மந்திரியாவது பேசியதுண்டா?

    தமிழ் உணர்வில் நல்ல தமிழ் பற்றாளர் எப்படியிருப்பாரோ அந்த உணர்வு பிரதமர் மோடியிடம் உள்ளது. இதற்கு நாம் பெருமைப்பட வேண்டும். சமஸ்கிருதத்தைவிட பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் சொன்னபோது ஒரு தமிழ் உணர்வாளராவது பாராட்டினார்களா? தமிழை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.



    தூத்துக்குடி சம்பவம் குறித்து தமிழக அரசு தனது துறையின் மீது நம்பிக்கை வைத்து விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது. தமிழக அரசின் எந்த துறையாக இருந்தாலும் அதில் பணியாற்றி ஓய்வுபெறுபவர்களுக்கு தேவையின்றி காலநீட்டிப்பு செய்வது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #mkstalin
    Next Story
    ×