என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம்-கல்லுப்பட்டியில் டிரைவர்- தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பாரதிநகரை சேர்ந்தவர் இருளப்பன். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 26), டேங்கர் லாரி டிரைவரான இவருக்கும், தும்மக்குண்டை சேர்ந்த பாபு (31) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று கப்பலூர் லாரி நிறுத்தத்தில் ஆனந்த ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரத் குமார், கணேஷ் ஆகியோர் ஆனந்தராஜை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு, சரத்குமார், கணேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விநாயகப் பெருமாள் (42). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மொசைக் கண்ணன் என்பவரது வீட்டில் கொட்டகை அமைக்க சென்றார்.
அப்போது விநாயகப் பெருமாளுக்கும், மொசைக் கண்ணனுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மொசைக் கண்ணன், அவரது உறவினர்கள் செல்வம், தவக்குமார் ஆகிய 3 பேர் தன்னை கட்டி வைத்து தாக்கியதாக விநாயகப் பெருமாள் டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்