search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையை குளிர்வித்த திடீர் மழை
    X

    சென்னையை குளிர்வித்த திடீர் மழை

    சென்னையில் நேற்று இரவு முழுவதும் லேசான மழை விடாது பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #Rain
    சென்னை:

    சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், மாலையில் இருந்து ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

    சென்னையில் உள்ள எழும்பூர், தரமணி கிண்டி கத்திப்பாரா, ஆலந்தூர், சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

    நேற்று இரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சூறைக்காற்றும் வீசியதால் வாகனங்களில் சென்றவர்கள் அவதிப்பட்டனர். மேலும், மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    காலை முதல் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு இரவில் பெய்த மழை சென்னையை நனைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

    இதேபோல், தமிழகமெங்கும் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. #Rain
    Next Story
    ×