search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடையில் மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல்: டிரைவர் கைது
    X

    ஓடையில் மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல்: டிரைவர் கைது

    ஓடையில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தத்தனூர் மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், அதே பகுதியில் உள்ள ஓடையில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த டிரைவர் அன்பழகனை (வயது 40) கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×