search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார் - தமிழிசை சவுந்தரராஜன்
    X

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார் - தமிழிசை சவுந்தரராஜன்

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிறார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை, கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால திட்டங்கள் போன்றவை குறித்து ஆலோசிக்க பா.ஜனதா உயர்மட்டக்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவமூர்த்தி, தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



    கூட்டம் முடிந்ததும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மிகப்பெரிய அளவில் இயற்கை சீரழிவு இல்லாமல் தான் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. காவிரி ஆணையம் அமைத்தல், நீட் தேர்வை அந்தந்த மாவட்டங்களில் எழுதுதல் என தொடர்ந்து மத்திய அரசு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தாலும் இங்குள்ள பல கட்சிகள் விமர்சனம் மட்டுமே செய்துவருகின்றன.

    கவர்னரின் சுற்றுப்பயணத்தை தி.மு.க. தேவையில்லாமல் அரசியலாக்குகிறது. கவர்னர் சட்டத்தில் உள்ள சரத்துக்களை அறிவித்து இருக்கிறார். ஆனால் அவர் எங்களை மிரட்டுகிறார் என்கிறார்கள். எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் இருக்க இதனை மட்டும் கையில் எடுப்பதால், இவர்கள் மக்கள் திட்டங்களுக்காக பேசமாட்டார் கள் என்று மக்களுக்கே புரிந்துவிட்டது.

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகைதர இருக்கிறார். தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் மட்டுமே அதிபுத்திசாலி என்றும் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை என்ற வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். 20 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் அறிவாற்றலும், உழைப்பாற்றலும், தேசிய பண்பும் பெற்று இருப்பதால் தான் இன்று ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருக்கிறேன்.

    எனக்கு தலைவராக இருக் கும் தகுதி இருக்கிறதா? என்பதை சொல்வதற்கு அன்பு மணிக்கு தகுதி இருக்கிறதா? என்பது வேறு விஷயம். இவர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது அவரால் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்துக்கு கொண்டுவர முடியவில்லை. யார் சுயமுயற்சியில் தலைவரானார்கள்? யார் அவர்களின் தந்தையின் முயற்சியில் தலைவரானார்கள்? என்பது குறித்து விவாதிக்க அன்புமணி ராமதாஸ் தயாரா?

    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். ஒரு தொலைக்காட்சியில் என்னிடம் கேள்வி கேட்கும்போது, மரம்வெட்டுவதை பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்கிறார் என்று கேட்கிறார்கள். அதற்கு நான், மரம் வெட்டுவதை பற்றி அவர்கள் பேசலாமா? என்று கேள்வி மட்டும் தான் கேட்டேன். உங்களுக்கு குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது? அதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×