search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களை மிரட்டும் மக்னா யானை - வனபகுதியில் முகாமிட்டுள்ள வேட்டை தடுப்பு காவலர்கள்
    X

    பொதுமக்களை மிரட்டும் மக்னா யானை - வனபகுதியில் முகாமிட்டுள்ள வேட்டை தடுப்பு காவலர்கள்

    பொதுமக்களை மிரட்டி வரும் மக்னா யானையை பிடிக்க வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பெரம்பட்டி, சாக்கலூத்து ஆகிய பகுதிகளில் மக்னா யானை விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் உடனே பிடித்து கேரளாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து வேட்டை தடுப்பு காவலர் குழு வந்துள்ளது.

    இவர்கள் முதல் கட்டமாக யானையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கால் தடம், சத்தம், இரை நடைவேகம், சாணம் ஆகியவற்றை வைத்து ஒற்றை யானை மக்னா யானை அல்ல. பெண் யானை என முடிவு செய்துள்ளனர். ஆனால் யானை எதற்காக ஆக்ரோ‌ஷமாக சுற்றித் திரிகிறது. என்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

    ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக தேனி மாவட்ட கலெக்டர், வன அதிகாரி ஆகியோர் எடுத்த முடிவின் படி மத்திய வன அதிகாரியின் உத்தரவுக்காக இந்த வேட்டை தடுப்பு குழுவினர் காத்திருக்கின்றனர். உத்தரவு கிடைத்தவுடன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கை தொடங்கும் என வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×