search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெறும்பூர் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
    X

    திருவெறும்பூர் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

    திருவெறும்பூர் அருகே குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழ வந்தான் கோட்டை காளியம்மன் கோவில் தெருவில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் தங்கமணி.

    இவரது மகன் சங்கிலிமுத்து (வயது 26). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால்சங்கிலி முத்து மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது சங்கிலி முத்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

    இதனால் குடிசை வீடு தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

    பின்னர் அங்கு உயிருக்கு போராடிய சங்கிலிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கிலி முத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×