search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.20 லட்சம் மோசடி
    X

    தேனி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.20 லட்சம் மோசடி

    தேனி அருகே வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3.20 லட்சம் மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    தேனி:

    தேனி அருகே கூடலூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பிலால்ரகுமான்(வயது35). மலேசியாவில் வேலை செய்துவிட்டு தற்போது சொந்தஊரில் வசித்து வருகிறார்.

    பிலால்ரகுமானை பெங்களூரை சேர்ந்த லலிதாஜூவாலா, எலிஜா, பியா, நான்லூத் உள்பட 6 பேர் தொடர்பு கொண்டு அமெரிக்காவில் வேலை உள்ளதாகவும், அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என கூறியுள்ளனர். இதற்காக ரூ.3.20லட்சம் செலவாகும். அதனை குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர்.

    இதனை உண்மை என நம்பி 2 தவணையாக ரூ.3.20 லட்சம் பணத்தை மோசடி கும்பல் கொடுத்த வங்கிக்கணக்கில் பிலால் ரகுமான் செலுத்தியுள்ளார். அதன்பின் வேலை வாங்கிதராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.

    எஸ்.பி உத்தரவின்பேரில் கூடலூர் வடக்கு போலீசார் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×