search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யலூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலி
    X

    அய்யலூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலி

    அய்யலூர் அருகே ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே எரியோட்டில் இருந்து அய்யலூர் நோக்கி அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ சென்றது. வேங்கனூர் அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் பாகாநத்தம் சவுடகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 65). அவரது மனைவி சின்னத்தாய் (வயது 63) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    மேலும் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், கார்த்திகேயன், ராமுத்தாய், ஆட்டோ டிரைவர் குமாரசாமி, உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகாண்டீபனிடம் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி ஆட்டோக்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் இப்பகுதியில் டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் வருகின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×