என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்20 Jun 2018 9:26 AM GMT (Updated: 20 Jun 2018 9:26 AM GMT)
தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது45). இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை குடும்பத்தார் அவரது சட்டை பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்தனர். அதில் குடும்ப பிரச்சனை காரணமாக தான் தற்கொலை செய்யப்போவதாக எழுதி இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஈஸ்வரன் இன்று காலை தலை கீழாக குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ஈஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். #Tamilnews
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது45). இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை குடும்பத்தார் அவரது சட்டை பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்தனர். அதில் குடும்ப பிரச்சனை காரணமாக தான் தற்கொலை செய்யப்போவதாக எழுதி இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஈஸ்வரன் இன்று காலை தலை கீழாக குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ஈஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X