search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி ஸ்டிரைக் - தக்காளி, வெங்காயம், கோஸ் விலை உயர்ந்தது
    X

    லாரி ஸ்டிரைக் - தக்காளி, வெங்காயம், கோஸ் விலை உயர்ந்தது

    லாரி ஸ்டிரைக் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் குறிப்பிட்ட சில காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 350 லாரிகளில் காய்கறிகள் வருவதுண்டு. ஆனால் இன்று 200 லாரிகள்தான் வந்தது. வெங்காயம் குறிப்பாக நாசிக் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரப்படும்.

    டீசல் விலை உயர்வு மற்றும் ஸ்டிரைக் காரணமாக வெங்காயம் 50 கிலோ மூட்டைக்கு கூடுதலாக 100 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை விலையில் 1 கிலோ வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தக்காளி 13 கிலோ கொண்ட பெட்டி ரூ.180-ல் இருந்து ரூ.250 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் 1 கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் ரூ.30 வரை விற்கப் படுகிறது.

    முட்டைக்கோஸ் 1 கிலோ 20 ரூபாயில் இருந்து 28 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. பீன்ஸ் 70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்ந்து விட்டது.

    மாம்பழம் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ.60-க்கு விலை உயர்ந்துள்ளது.

    Next Story
    ×