search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி அருகே செல்போன் டவரில் பேட்டரிகள் திருடிய 4 பேர் கைது
    X

    செஞ்சி அருகே செல்போன் டவரில் பேட்டரிகள் திருடிய 4 பேர் கைது

    செஞ்சி அருகே செல்போன் டவரில் பேட்டரிகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் இருந்து டவர் சரியாக கிடைக்கவில்லை என்று புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து விழுப்புரம் இளநிலை தொடர்பு அலுவலர் சத்தியசீலன் தலைமையில் ஊழியர்கள் அந்த செல்போன் டவரை ஆய்வு செய்வதற்காக வந்தனர்.

    அப்போது அந்த டவரில் இருந்த பேட்டரிகளை திருடி 4 வாலிபர்கள் காரில் ஏற்றி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அதிகாரிகள் உடனே அவர்கள் 4 பேரையும், பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து செஞ்சி போலீசில் ஒப்படைத்தனர்.

    அந்த வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்த அஜீத் (வயது20), பெங்களூரை சேர்ந்த கிரண் (22), கிஷோர் (21), சந்தோஷ் (21) என்பதும், இவர்கள் செல்போன் டவர்களில் உள்ள பேட்டரிகளை திருடியதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் வந்த கார் மற்றும் திருடிய பேட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×