search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலி
    X

    தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலி

    தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு புதுநகர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி குப்பம்மாள் (70).

    சம்பவத்தன்று இவர் தவளக்குப்பம் மார்க் கெட்டுக்கு வந்தார். அங்கு பொருட்கள் வாங்கி கொண்டு வீடு திரும்ப தயாரானார். அப்போது பலத்த மழை மற்றும் சூறை காற்று காரணமாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

    அந்த நேரத்தில் குப்பம்மாள் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் குப்பம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில், தூக்கி வீசப்பட்ட குப்பம்மாள் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை குப்பம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் கேசவன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×