என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 வயது சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்19 Jun 2018 11:20 AM GMT (Updated: 19 Jun 2018 11:20 AM GMT)
சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வேலூர்:
ஆம்பூர் ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்த சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை சதீஷ்குமார் கடத்தி சென்று கற்பழித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயிலில் இருந்து சதீஷ்குமாரை அழைத்து வரப்பட்டு, மகளிர் கோர்ட்டு நீதிபதி செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா வாதாடினார்.
குற்றம் நிரூபனமானதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சதீஷ்குமாருக்கு 2 பிரிவுகளில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து, சதீஷ்குமார் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #Tamilnews
ஆம்பூர் ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்த சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை சதீஷ்குமார் கடத்தி சென்று கற்பழித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயிலில் இருந்து சதீஷ்குமாரை அழைத்து வரப்பட்டு, மகளிர் கோர்ட்டு நீதிபதி செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா வாதாடினார்.
குற்றம் நிரூபனமானதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சதீஷ்குமாருக்கு 2 பிரிவுகளில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து, சதீஷ்குமார் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X