search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே கல்லூரி மாணவி கற்பழிப்பு- நண்பருடன் சேர்ந்து காதலன் கொடூரம்
    X

    மேலூர் அருகே கல்லூரி மாணவி கற்பழிப்பு- நண்பருடன் சேர்ந்து காதலன் கொடூரம்

    மேலூர் அருகே கல்லூரி மாணவியை நண்பருடன் சேர்ந்து காதலன் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் சரகத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 22). பட்டதாரியான அவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் ஊரின் அருகில் உள்ள கண்மாய் பகுதியில் அந்த மாணவி அலங்கோலமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அந்த பெண்ணை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந் தவர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கீழவளவு போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகளை பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் என்ஜீனியரிங் மாணவர் குணா (18) ஆகியோர் கற்பழித்ததாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். குணாவை தேடி வருகிறார். #Tamilnews
    Next Story
    ×