search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

    நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பாக மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் திருச்செங்கோட்டில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பாக மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் திருச்செங்கோட்டில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் புறப்பட்ட இந்த ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வந்து சங்ககிரி ரோடு கோர்ட்டு அருகே நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இளைஞரணி மாநில செயலாளர் கோபிநாத், இளைஞரணி திருச்சி கோட்ட இணை பொறுப்பாளர் கார்த்தி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சட்டமன்ற பொறுப்பாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் ஒன்றிய தலைவர் ரமேஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் மணிஷ், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர்கள் தங்கபிரகாஷ், ராமசந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மதியரசு, மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் கனகராஜ், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் அஜித், நகர இளைஞரணி தலைவர் தீபக்ராஜ், நகர இளைஞரணி செயலாளர் தீபன்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி துணை தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×