என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே லாரி - கார் மோதி விபத்து: பெண் பலி
Byமாலை மலர்18 Jun 2018 5:30 PM GMT (Updated: 18 Jun 2018 5:30 PM GMT)
குடியாத்தம் அருகே காரும், சிமெண்டு சீட்டுகளை ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியானார்
குடியாத்தம்:
குடியாத்தம் நெல்லூர்பேட்டை தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). இவரது மனைவி ஹேமாவதி (வயது 60). இவர்கள் ஆம்பூரில் நடைபெற்ற தங்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று காலையில் குடியாத்தத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் சோமேஸ்வரன் ஓட்டி சென்றார். குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் அருகே சென்றபோது இவர்கள் சென்ற காரும், எதிரே கோவையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சிமெண்டு சீட்டுகளை ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில் காரில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹேமாவதி வழியிலேயே இறந்து விட்டார். காயம் அடைந்த சண்முகம், டிரைவர் சோமேஸ்வரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). இவரது மனைவி ஹேமாவதி (வயது 60). இவர்கள் ஆம்பூரில் நடைபெற்ற தங்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று காலையில் குடியாத்தத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் சோமேஸ்வரன் ஓட்டி சென்றார். குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் அருகே சென்றபோது இவர்கள் சென்ற காரும், எதிரே கோவையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சிமெண்டு சீட்டுகளை ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில் காரில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹேமாவதி வழியிலேயே இறந்து விட்டார். காயம் அடைந்த சண்முகம், டிரைவர் சோமேஸ்வரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X