search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் பாரதிய ஜனதா ஆலோசனை கூட்டம்
    X

    பெரம்பலூரில் பாரதிய ஜனதா ஆலோசனை கூட்டம்

    பெரம்பலூரில் பா.ஜனதா கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதியின் மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பா.ஜனதா கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதியின் மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் முருகேசன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக திருச்சி கோட்ட பொறுப்பாளரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ராமகிருஷ்ணா சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சுபிக்‌ஷா சாமிநாதன், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் மணிவேலு நன்றி கூறினார். 
    Next Story
    ×