search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தல்லாகுளத்தில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் ஏட்டு விரலை கடித்த கணவர்
    X

    தல்லாகுளத்தில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் ஏட்டு விரலை கடித்த கணவர்

    குடும்ப தகராறில் பெண் போலீஸ் ஏட்டு விரலை அவரது கணவர் கடித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை தல்லாகுளம் ஆயுதப்படை குடியிருப்பில் வசிப்பவர் நாகராஜன் (வயது39). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி இந்திரா (34). ஆயுதப்படையில் ஏட்டாக உள்ளார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்றும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் மோதலாக மாற, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    நாகராஜன் ஆத்திரத்தில் மனைவி இந்திராவின் கை விரலை கடித்து விட்டதாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×