என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலத்தில் என்ஜினீயரை தாக்கி செல்போன் பறிப்பு: மர்மகும்பல் அட்டூழியம்
சேலம்:
சேலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர். நேற்று இரவு பணியை முடித்துக்கொண்டு ஊருக்கு செல்வதற்காக புதிய பஸ் நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் பஸ்சில் ஏறி, டி.வி.எஸ். பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அந்த சமயத்தில் ஆட்டோவில் வந்த 3 பேர் மர்மகும்பல் அவரை தாக்கி செல்போனை பறித்தது. பின்னர் தங்க மோதிரத்தையும் பறிக்க முயன்றது. உயிருக்கு பயந்து போன அவர் நேராக ஓடிச்சென்று அருகில் உள்ள ஒரு நிறுவனத்திற்குள் புகுந்தார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காவலாளிகள் அவரை காப்பாற்றி மர்மகும்பலை துரத்தினார்கள். இதையடுத்து மர்மகும்பல் ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றது. பின்னர் உதவி என்ஜினீயரை ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, பத்திரமாக பஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் என்ஜினீயரை தாக்கி மர்மகும்பல் வழிப்பறி செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்