search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் 3 குழந்தைகளுடன் தாய் மாயம்
    X

    திருப்பூரில் 3 குழந்தைகளுடன் தாய் மாயம்

    திருப்பூரில் 3 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து 15. வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி. பிரிண்டிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி யோகபிரியா (வயது 25). இந்த தம்பதிக்கு அகிலன் (6), யோகித் (5), பிரணாவ் (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி அருள்ஜோதி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அருள்ஜோதி மனைவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் என்று வந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் 3 குழந்தைகளை தேடி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×