search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே பைக்கில் வந்து பணம், செல்போனை பறித்த கும்பல்
    X

    கூடலூர் அருகே பைக்கில் வந்து பணம், செல்போனை பறித்த கும்பல்

    கூடலூர் அருகே பைக்கில் வந்து பணம், செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    கூடலூர் அருகே கம்பம் எல்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது20). இவர் சம்பவத்தன்று தனது அண்ணன் மற்றும் நண்பருடன் கூடலூர் அருகே கே.ஜி.பட்டி சுருளியாறு மின் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவர்களை வழிமறித்து மிரட்டி அவர்களிடம் இருந்த பணம், 2 செல்போன்களையும் பறித்து சென்றனர். இது குறித்து பத்மநாபன் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×