search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னங்குறிச்சியில் 3 வயது மகனுடன் தாய் மாயம்
    X

    கன்னங்குறிச்சியில் 3 வயது மகனுடன் தாய் மாயம்

    கன்னங்குறிச்சியில் 3 வயது மகனுடன் காணமல் போன பெண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரமணி (வயது 21). இவர் சம்பவத்தன்று ஆதார் கார்டு எடுக்க செல்வதாக கூறிவிட்டு தனது 3 வயது மகன் தென்னரசுவுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.

    அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இது குறித்து ரமணியின் தாய் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாயமான ரமணி மற்றும் அவரது மகனையும் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×