search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஞ்சுகிராமம் அருகே வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    அஞ்சுகிராமம் அருகே வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    அஞ்சுகிராமம் அருகே வேன் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமத்தை அடுத்த அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்செரின் (வயது 32). வேன் டிரைவர்.

    கடந்த 15-ந்தேதி குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்று இருந்தார். அங்கிருந்து நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது.

    மேலும் பீரோவில் இருந்த 7¼ பவுன் நகை மற்றும் ரூ.32 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ, உடைக்கப்பட்ட கதவு ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பதால் உள்ளூர் கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×