search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டையில் துப்புரவு பணியாளர்கள் வீட்டில் தீ விபத்து
    X

    தேவகோட்டையில் துப்புரவு பணியாளர்கள் வீட்டில் தீ விபத்து

    தேவகோட்டையில் துப்புரவு பணியாளர்கள் வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடிசைகள் எரிந்து நாசமானது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை நகர் சரஸ்வதி வாசக சாலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் உள்ளனர்.

    நேற்றிரவு முனியம்மாள் என்பவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவர் அலறிக் கொண்டு வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினார்.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அருகில் உள்ள தேவகி என்பவரது வீட்டிற்கும் தீ பரவியது.

    இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் முனியம்மாள் மற்றும் தேவகியின் வீடுகள் எரிந்து நாசமாயின. வீட்டிற்குள் இருந்த பொருட்களும் கருகி சேதமடைந்தன.

    தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×